fbpx

இந்தியாவில் 5 விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூட உத்தரவு…! பாகிஸ்தான் மீதான தாக்குதல் எதிரொலி!

“ஆபரேஷன் சிந்தூர்’ – பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் தொடர்ந்து தர்ம‌சாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட வட இந்திய விமான நிலையங்கள், மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் கடந்த 22-ம் தேதி வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தலைமறைவாக உள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முரிட்கே பகுதியில் இருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைமையகம் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டது. மேலும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் வழக்கமாக உரை நிகழ்த்தும் மசூதியும் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா நடத்திய தாக்குதலால் பாகிஸ்தான் எல்லையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர்’ – பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் தொடர்ந்து தர்ம‌சாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட வட இந்திய விமான நிலையங்கள், மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

Read More: பெரும் சோகம்..! 3 இந்தியர்கள் பலி!. பாகிஸ்தான் ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்…!

English Summary

Echoes of attack on Pakistan… 5 airports including Jammu ordered to close until further notice

Vignesh

Next Post

”ஆப்ரேஷன் சிந்தூர்”!. இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர்!. ஜம்மு காஷ்மீரில் இன்று பள்ளிகள் மூடல்!. உச்சக்கட்ட பரபரப்பில் இந்தியா!.

Wed May 7 , 2025
"Operation Sindoor"!. The Prime Minister kept watch all night!. Schools to be closed in Jammu and Kashmir today!. India in a state of heightened tension!.

You May Like