fbpx

’நாடே ஏற்றுக் கொண்டாலும் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது’..!! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேட்டி..!!

எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”புதிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழ்நாடு அரசுக்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன், கல்வியில் மட்டுமல்ல ஏற்கனவே அறிவித்த பட்ஜெட்டில் கூட ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. ஆனால், வரிசெலுத்தி விட்டு, ஒவ்வொரு மாநிலமும் நிதி கேட்பது அநியாயம் என்று வாய்க்கூசாமல் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் எப்போதுமே இருமொழிக் கொள்கைதான். எந்த காலத்திலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டாம் என்று அண்ணா சொல்லியுள்ளார். எந்த வகையில் முயன்றாலும், எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது. தமிழ்நாட்டு மக்களும் அதை அனுமதிக்க மாட்டார்கள்.

நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டாலும், நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். எங்களுக்கு அது தேவையே கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவம் உள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்துவிட்டு, இன்று உலகம் முழுவதும் மருத்துவர்கள், பொறியாளா்கள் சாதனைப் படைத்து வருகின்றனர். நாங்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Read More : இனி வயாகரா மாத்திரை வேண்டாம்..!! அதைவிட சூப்பர் பவர் கொடுக்கும் அரிசி..!! இப்படி சமைச்சு சாப்பிட்டு பாருங்க..!!

English Summary

Deputy Chief Minister Udhayanidhi Stalin has said that the Tamil Nadu government will not allow a three-language policy at any time.

Chella

Next Post

அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு...! முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு...!

Tue Feb 18 , 2025
CBI files case against former AIADMK minister Rajendra Balaji

You May Like