fbpx

ஜூலை 18 முதல் அமலுக்கு வந்த பேக் செய்யப்பட்டு பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் எவை…?

47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, முன்கூட்டியே உறையிடப்பட்டு, பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவது தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்ட தயாரிப்பின் பெயரோ அல்லது பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட தயாரிப்பின் பெயருள்ள பொருட்களுக்கோ ஜிஎஸ்டி யை அமல்படுத்துவதில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

இது சம்பந்தமாக பருப்பு வகைகள், மாவு, தானியங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் பற்றி சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. இன்று முதல் அமலுக்கு வந்த ஏற்கனவே பேக் செய்யப்பட்டு, பெயர் பொறிக்கப்பட்ட பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவது தொடர்பாக எழும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஜூலை 18, 2022 முதல் அமலுக்கு வந்த பேக் செய்யப்பட்டு பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் எவை?

பேக் செய்யப்பட்டு ஏற்கனவே உணவுப் பொருட்கள் அடைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட தயாரிப்பின்  பெயரோ  அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்ட தயாரிப்பின் பெயரோ பொறிக்கப்பட்ட குறிப்பிட்ட பொருட்களுக்கு ஜூலை 18, 2022க்கு முன்பு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. ஜூலை 18, 2022 முதல் இந்த விதியில்  மாற்றம் செய்யப்பட்டு, முன்கூட்டியே உறையிடப்பட்டு பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். உதாரணமாக, கொள்கலனில் அடைக்கப்பட்ட தயாரிப்பின் பெயரில் உள்ள பருப்பு வகைகள், அரிசி, கோதுமை முதலிய தானியங்கள், மாவு வகைகள் உள்ளிட்டவற்றிற்கு இதற்கு முன்பு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.

18.7.2022 முதல் இதுபோன்ற பொருட்கள் முன்கூட்டியே உறையிடப்பட்டு, பெயர் பொறிக்கப்பட்டிருந்தால் அவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இது தவிர தயிர், லஸ்ஸி, பொறி போன்ற இதர பொருட்கள் இவ்வாறு முன்கூட்டு உறையிடப்பட்டு பெயர் பொறிக்கப்பட்டிருந்தால் ஜூலை 18, 2022 முதல் அவற்றுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். பெயர் பொறிக்கப்பட்ட பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கும் நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றம், இதுவாகும்.

கிலோ அல்லது 25 லிட்டர் வரையிலான பேக்கேஜில் சில்லரை வியாபாரியால் வாங்கப்பட்ட இத்தகைய பொருள்களை தமது கடையில் குறைந்த அளவுகளில் விற்கும் போது வரி செலுத்த வேண்டுமா..?

முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட மற்றும் முத்திரையிடப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தும். எனவே முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட மற்றும் முத்திரையிடப்பட்ட பொருட்கள் விநியோகஸ்தர் / உற்பத்தியாளரால் சில்லரை வியாபாரிக்கு விற்கப்படும் போது ஜிஎஸ்டி பொருந்தும். இருப்பினும் வேறு ஏதாவது காரணம் இருந்தால் இத்தகைய பேக்கேஜில் இருந்து குறைந்த அளவுக்கு சில்லரை வியாபாரி விநியோகம் செய்யும் போது, அத்தகைய விநியோகம் ஜிஎஸ்டி வரிக்கான பேக் செய்யப்பட்ட பொருளின் விநியோகமாக இருக்காது.

Vignesh

Next Post

#Job Notification: BOB வங்கியில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Tue Jul 19 , 2022
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Asst. Vice President – Acquisition & Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்புடைய பாடத்தில்; Diploma, Chartered Accountant, Graduate Degree அல்லது Post Graduate DegreeB.E அல்லது […]

You May Like