fbpx

ஏரிகளில்‌ வண்டல்‌ மண்‌ எடுக்க விவசாயிகளுக்கு மட்டும் அனுமதி…! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!

சேலம்‌ மாவட்ட விவசாயிகள்‌ அனுமதி பெற்று ஏரிகளில்‌ வண்டல்‌ மண்‌ எடுத்து விவசாயப்‌ பணிகளுக்கு பயன்படுத்திக்‌ கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு சிறு கனிம விதிகளின்படி, பொதுப்பணித்துறை மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ பராமரிப்பில்‌ உள்ள ஏரிகளிலிருந்து விவசாயிகள்‌ விவசாய பணிகளுக்கு வண்டல்‌ மண்‌ எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

சேலம்‌ மாவட்டத்தில்‌ பொதுப்‌ பணித்துறை மற்றும்‌ ஊராட்‌ சிகளின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள ஏரிகளில்‌ சேலம்‌ வட்டத்தில்‌ 9 ஏரிகளும்‌, சேலம்‌ தெற்கு வட்டத்தில்‌ 2, வாழப்பாடி வட்டத்தில்‌ 3, மேட்டூர்‌ வட்டத்தில்‌ 8, காடையாம்பட்டி வட்டத்தில்‌ 7, சங்ககிரி வட்டத்தில்‌, எடப்பாடி வட்டத்தில்‌ 5, ஆத்தூர்‌ வட்டத்தில்‌ 6, பெத்தநாயக்கன்பாளையம்‌ வட்டத்தில்‌ 9, தலைவாசல்‌ வட்டத்தில்‌ 5 மற்றும்‌ கெங்கவல்லி வட்டத்தில்‌ 21 ஏரிகள்‌ என மொத்தம்‌ 76 ஏரிகளில்‌ விவசாயிகள்‌ விவசாய பணிகளுக்கு வண்டல்‌ மண்‌ எடுத்துக்கொள்ளலாம்.

வண்டல்‌ மண்‌ தேவைப்படும்‌ விவசாயிகள்‌ மேற்கண்டவாறு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம்‌ விண்ணப்பித்து, கனிம விதிகளுக்கு உட்பட்டு அனுமதி பெற்று ஏரிகளில்‌ வண்டல்‌ மண்‌ எடுத்து விவசாயப்‌ பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்‌ என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கோடைகால பயணம்!... தோல் பராமரிப்பு குறிப்புகள்!... கட்டாயம் பின்பற்றுங்கள்!

Sat Apr 22 , 2023
கோடைகால பயணத்தின் போது கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில தோல் பராமரிப்பு குறிப்புகள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். கோடைகாலம் தொடங்கி விட்டாலே வாட்டும் வெயிலின் தாக்கத்திற்கு பயந்து பலரும் வெளியில் செல்வதற்கு சற்று தயங்குவதுண்டு. ஏனென்றால் வெளியில் செல்லும்போது உடல் ஆரோக்கியம் மற்றும் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்ற அச்சத்திலேயே பலரும் வெளியில் செல்வதற்கு தயங்குவர். அந்த வகையில் கோடைகால பயணத்தின் போது கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில […]

You May Like