fbpx

நைட் ஷிப்ட்டில் பெண் டாக்டர்..!! சிகிச்சைக்கு வந்த நோயாளி..!! பலாத்காரம்..!! ஒரே சத்தம்..!! பரபரப்பு..!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று பெண் மருத்துவர் இரவு பணியில் இருந்துள்ளார். அவருக்கு நோயாளி ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர். பின்னர் இது குறித்து அந்த மருத்துவர் காந்தி நகர் போலீசில் புகார் செய்தார்.

மருத்துவர் அளித்த புகாரில், நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த நோயாளியை அழைத்து வந்தனர். அவரை நான் பரிசோதித்த போது, அந்த நோயாளி என்னை தகாத வார்த்தைகள் பேசினார். மேலும், என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டினார், என்றும் கூறினார். இதனையடுத்து போலீசார் அந்த நபரை மீண்டும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இதுபோல பெண் மருத்துவர் ஒருவருக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவமும், தொடர்ச்சியாக சில சம்பவங்களும் கேரளாவில் நடந்து வருகிறது. மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்திலும் அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

Chella

Next Post

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது…..! வெளியானது தேதி…..!

Wed Jun 21 , 2023
தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றனர். இவற்றில் இளநிலை படிப்புகளில் 1,07,299 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு மே மாதம் 22ஆம் தேதி உடன் முடிவுற்றது. ஒட்டுமொத்தமாக 2,99,558 மாணவர்கள் பதிவு செய்திருக்கின்ற நிலையில், 2,44,104 மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கட்டணமும் செலுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]

You May Like