fbpx

பண்டிகை கால சிறப்பு ரயில்..!! தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!! பயணிகளே நோட் பண்ணிக்கோங்க..!!

அக்டோபர் மாத திருவிழாக்களை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

அதன்படி, ரயில் எண்கள்: 06049/06050 கொண்ட சிறப்பு ரயில் “தாம்பரம் ரயில் நிலையம் – மங்களூரூ – தாம்பரம் ரயில் நிலையம்” செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண்: 06049 கொண்ட சிறப்பு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து செப்.30, அக்.06, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மேலே குறிப்பிட்ட நாட்களில் மதியம் 1.30க்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மங்களூரூ ரயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கமாக ரயில் எண்: 06050 கொண்ட சிறப்பு ரயில்கள் மங்களூரூ ரயில் நிலையத்தில் இருந்து செப்டம்பர் 30, அக்.7, 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மதியம் 12 மணிக்கு மங்களூரிலிருந்து புறப்பட்டு காலை 05.00 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் சென்றடைகிறது. இதே போல் ரயில் எண்கள்: 06061/06062 கொண்ட சிறப்பு ரயில் “தாம்பரம் ரயில் நிலையம் – திருச்சி ரயில் நிலையம் – தாம்பரம் ரயில் நிலையம்” செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண்: 06061 கொண்ட சிறப்பு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து செப்.30ஆம் தேதி இரவு 10.30க்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.10 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் வழியாக திருச்சி ரயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கமாக ரயில் எண்: 06062 சிறப்பு ரயில் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து அக்.1ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.10 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கமாக இந்த சிறப்பு ரயில் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக தாம்பரம் ரயில் நிலையம் சென்றடைகிறது.

இதே போல் ரயில் எண்கள்: 06907/06908 கொண்ட பாரத் கௌரவ் சேவை சிறப்பு ரயில் “சென்னை ஏழும்பூர் ரயில் நிலையம் – சாய்நகர் ஷீரடி ரயில் நிலையம் – சென்னை ஏழும்பூர் ரயில் நிலையம்” செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண்: 06907 கொண்ட பாரத் கௌரவ் சேவை சிறப்பு ரயில் சென்னை ஏழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து செப்.28ஆம் தேதி மதியம் 2.00 மணிக்கு புறப்பட்டு செப்டம்பர் 30ஆம் தேதி காலை 06.30 மணிக்கு சாய்நகர் ஷீரடி ரயில் நிலையம் சென்றடைந்தது.

மறுமார்க்கமாக இந்த சிறப்பு ரயில் சாய்நகர் ஷீரடி ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 1ஆம் தேதி மாலை 07.35 மணிக்கு புறப்பட்டு அக்டோபர் 3ஆம் தேதி காலை 08.30 மணிக்கு சென்னை ஏழும்பூர் ரயில் நிலையம் சென்றடைகிறது” என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Chella

Next Post

பெற்றோர்களே உஷார்..!! ஒருவார காய்ச்சலுக்கு மெடிக்கலில் மருந்து..!! பறிபோன 2 வயது குழந்தையின் உயிர்..!! சென்னையில் அதிர்ச்சி..!!

Fri Sep 29 , 2023
ஒருவார காய்ச்சலுக்கு மருத்துவமனை செல்லாமல் மெடிக்கலில் மருந்து வாங்கிக் கொடுத்ததால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் ராம்ஜித் (33). இவரது மனைவி கல்பனா (30). உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இந்த தம்பதிக்கு அன்புல் (9), பிரன்சூல் (7) மற்றும் டிபிஹன் (2) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். இதில் இரண்டு வயது குழந்தையான டிபிஹனை கல்பனா […]

You May Like