fbpx

முன்னாள் சட்டத்துறை அமைச்சருக்கு மரண தண்டனை..! ஊழல் வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

சீனாவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயரதிகாரியான ஃபுஸெங்குவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சீனா டெய்லி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், “ஜிலின் மாகாணத்துக்கு உள்பட்ட ஜாங்சூன் பகுதியில் அமைந்துள்ள மக்கள் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. ஃபு பெய்ஜிங் மாநகராட்சியின் பொது பாதுகாப்பு அதிகாரி, பொதுப் பாதுகாப்பு துணை அமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சருக்கு மரண தண்டனை..! ஊழல் வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரும், அவரது குடும்பத்தினரும் பல்வேறு ஊழல்களை செய்து அதன் மூலம் லாபம் அடைந்திருப்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழல் புரிந்தது மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்டக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த மரண தண்டனை ஃபு ஸெங்குவாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட ’பாட்டி’ சுத்தியால் அடித்துக் கொலை …சென்னையில் பயங்கரம்…

Thu Sep 22 , 2022
சென்னையில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் 70 வயது பாட்டியை பேரனே சுத்தியால் அடித்துக் கொன்ற பயங்கரம் நடந்துள்ளது. சென்னை  கொருக்குபேட்டையில்  கருமாரியம்மன் நகரில் தனியாக வசித்து வந்தவர் விசாலாட்சி (70) . இவரது மகள் அமுதா. அதே பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகின்றார். அமுதாவின் மகன் சதீஷ்.. சில நாட்களுக்கு முன்பு அமுதாவிற்கு ஒரு லட்சம் ரூபாய் விசாலாட்சி கொடுத்துள்ளார். அதை திருப்பித்தரவேண்டும் என்று […]

You May Like