fbpx

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நெருங்கிய நண்பர் வீட்டில் வருமான வரி சோதனை..

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நெருங்கிய நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது..

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. கோவை வடவள்ளி என்ற பகுதியில் உள்ள அவரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.. ஐ.டி சோதனைக்குள்ளாகி உள்ள சந்திரசேகர் எஸ்.பி வேலுமணியின் நெருங்கிய நண்பர் ஆவர்.. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும் சந்திரசேகர் இருக்கிறார்..

ஏற்கனவே எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது, சந்திரசேகரின் வீட்டிலும் 2 முறை சோதனை நடைபெற்றுள்ளது.. இந்நிலையில் இன்று மீண்டும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.. சந்திரசேகரின் வீடு, தோட்டம், அலுவலகம் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

சீனா சென்ற ஸ்பைஸ்ஜெட் சரக்கு விமானம் கொல்கத்தா திரும்பியது.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 3வது சம்பவம்

Wed Jul 6 , 2022
மோசமான வானிலை காரணமாக சீனா சென்ற ஸ்பைஸ்ஜெட் சரக்கு விமானம் கொல்கத்தா திரும்பியது. ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 சரக்கு விமானம் கொல்கத்தாவில் இருந்து சீனாவின் சோங்கிங்கிற்கு இயக்க திட்டமிடப்பட்டது. புறப்பட்ட பிறகு, வானிலை ரேடார் வானிலையைக் காட்டவில்லை. எனவே மீண்டும் கொல்கத்தாவிற்கு திரும்ப முடிவு செய்தது. விமானம் கொல்கத்தாவில் பத்திரமாக தரையிறங்கியது” என்று தெரிவித்துள்ளார்.. கடந்த 24 மணி நேரத்தில் […]

You May Like