fbpx

தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.37,336-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.9 உயர்ந்து, ரூ.4,667-க்கு விற்பனையாகிறது…. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.37,336-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 30 காசு உயர்ந்து ரூ.61க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

வனப்பகுதியில் சடலமாக கிடந்த கேரள இளைஞர்கள்..! கால்நடை மேச்சலுக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Wed Jul 20 , 2022
நல்லம்பள்ளி வனப்பகுதியில் உள்ள கல்குவாரி அருகே கேரளாவைச் சார்ந்த இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் செல்லும் வழியில் பூதனல்லி வனப்பகுதியில் கல்குவாரி ஒன்று இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அந்தக் கல்குவாரி அருகே இரண்டு சடலங்கள் இருப்பதைக் கண்ட, கால்நடை மேச்சலுக்கு சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அதியமான் கோட்டை போலீசார், […]
தாயுடன் மாயமான குழந்தைகள்..!! கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்..!! வழக்கில் திடீர் திருப்பம்

You May Like