இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த வகையில், பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.7.705-க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.61.640-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,07,000 ஆக விற்பனையாகிறது.