ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஜம்மு – காஷ்மீரில் நேற்றிரவு (வியாழக்கிழமை) பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரில் சைரன் ஒலிக்கச் செய்து பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபோல், பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்திய நிலையில், அதை இந்திய ராணுவம் முறியடித்தது. பாகிஸ்தானின் போர் விமானங்கள் இந்திய வான்பரப்புக்குள் வந்தபோது இடைமறிக்கப்பட்டு அவை வானிலேயே வைத்து அழிக்கப்பட்டன.
மேலும், காஷ்மீர் பகுதியில் உள்ள மக்கள் நேற்றிரவு பாதுகாப்பு காரனமாக பதுங்குகுழிகளில் தஞ்சம் அடைந்தனர். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உள்ள சில பள்ளிகள் பாதுகாப்பு காரணங்களால் மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளன. மேலும், இந்திய தலைநகரான டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா கேட் பகுதி காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் பாணியில் இந்தியா மீது நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதாவது, ஒரே நேரத்தில் ஒரு நகரை குறிவைத்து ஏராளமான ஏவுகணைகளை வீசி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்தியா அதை முறியடித்தது.
Read More : தோட்டக்கலையில் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் 10 வாழ்க்கை பாடங்கள்..!! பெற்றோர்களே கண்டிப்பா இதை படிங்க..!!