fbpx

வருமான வரி செலுத்தி விட்டீர்களா..? குறுஞ்செய்தி ஏதேனும் வந்துருக்கா..? வெளியான மிக முக்கிய எச்சரிக்கை..!!

2022-23ம் நிதியாண்டுக்கான வருமான வரியை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, வரி ஏய்ப்பு செய்ய வகையில் போலியான வாடகை ரசீதுகளைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மாத சம்பளம் வாங்குபவர்கள் தவறான வருமான வரி கணக்குகளை சமர்ப்பித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது போலி வாடகை ரசீதுகளை முதல் நன்கொடை செலுத்தியதாக தவறான ரசீது கொடுப்பது போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், அதுமட்டும் இல்லாமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரி செலுத்தியவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தபோது சிலருக்கு ரீபண்ட் தொகை ரூ.15,490 வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருகிறது. மத்திய அரசின் PIB Facat Check இதுபோன்ற செய்திகள் அனுப்பப்பட்டு தனிப்பட்ட தகவல்கள் சேகரிப்படுவதை கண்டறிந்துள்ளது. வருமான வரித்துறை இதுபோன்ற செய்திகளை அனுப்பவில்லை என்றும் இதுபோன்ற செய்தியை நம்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

Chella

Next Post

தனது ஆசைக்கு இணங்க மறுத்த முன்னாள் காதலியை கொன்று புதரில் வீசிய காதலன்.. அழுகிய நிலையில் பெண் சடலம்..!

Wed Aug 2 , 2023
உத்தரப்பிரதேசம் தம்பூர் பகுதியை சேர்ந்தவர் புனித். இவர் உத்தரகாண்ட் மாநிலம் சித்கல் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைஸராக பணியாற்றி வருகிறார். புனித்தும் சித்கல் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு இரண்டு குடும்பத்தினருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் புனித்துக்கு வேறறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து புனித்துடனான […]

You May Like