fbpx

நாளை இந்த 5 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கப் போகுது..!! தமிழ்நாட்டில் 16ஆம் தேதி வரை சம்பவம் இருக்கு..!!

தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு கழற்சி நிலவுகிறது. இதனால், இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், நாளைய தினம் (ஜனவரி 11) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல், வரும் 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ”வாய் இருந்தால் என்ன வேணாலும் பேசுவீங்களா”..? இறந்துபோனவர்களை வைத்து எதுக்கு இந்த அரசியல் பண்றீங்க..!! கடுப்பான பிரேமலதா

English Summary

The Chennai Meteorological Department has announced that there is a possibility of heavy rain in 5 districts of Tamil Nadu tomorrow.

Chella

Next Post

”படத்திற்காக விஷாலின் கண்களை தைத்த பாலா”..!! ”சும்மா விட மாட்டோம்; கேஸ் போட போறோம்”..!! கொந்தளித்த நண்பர்

Sat Jan 11 , 2025
Vishal's eyes were pulled out and sewn shut for this film. Everyone knows how much Vishal suffered for the film Avan Ivan.

You May Like