fbpx

ஷாக்..! வரும் 11-ம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை…! செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி வரும் 11ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு, மாமல்லபுரத்தில் 1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் கடைசியாக நடைபெற்ற சித்திரை பெருவிழாவையடுத்து அந்த விழா, தொல்லியல் துறை தடை உத்தரவால் கடந்த 12 ஆண்டுகளாக மாமல்லபுரத்தில் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் மற்றும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் லட்சக்கணக்கில் பாமக மற்றும் வன்னிய சங்கத்தினர் கூடும் வகையில், மீண்டும் சித்திரை முழு நிலவு பெருவிழாவை நடத்த பாமக முடிவு செய்துள்ளது. மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் உள்ள சித்திரை முழு நிலவு பெருவிழா மாநாடு நடத்துவதற்கு 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி வரும் 11ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; 2025 ஆம் ஆண்டு மே மாதம் 11.05.2025 (ஞாயிற்று கிழமை) சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருவிடந்தை கிராமத்தில் நடைபெறுவதை முன்னிட்டு அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் (FL1. FL2. FL3. FL3A. FL3AA, மற்றும் FL11) மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிம நிறுவனங்களுக்கு 2025 ஆம் ஆண்டு சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் கடைகள் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: பெரும் சோகம்..! 3 இந்தியர்கள் பலி!. பாகிஸ்தான் ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்…!

English Summary

Holiday for liquor shops on the 11th…! Chengalpattu District Collector orders

Vignesh

Next Post

கொளுத்தும் வெயிலில் சூட்டை குறைக்கும் பீட்ரூட் ரைத்தா!. செய்முறை மற்றும் நன்மைகள் இதோ!

Wed May 7 , 2025
Beetroot Raita to cool down in the scorching sun! Here is the recipe and benefits!

You May Like