fbpx

தென்காசியில் பயங்கரம்..!! எரிந்த நிலையில் இளம்பெண் சடலமாக மீட்பு..!! அருகில் கிடந்த மது பாட்டில்கள்..!! கொலை நடந்தது எப்படி..?

தென்காசி மாவட்டம் அடுத்த இலத்தூர் பகுதியில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், நேரில் விசாரணை நடத்தி வருகிறார். எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் யார்..? கொலை செய்யப்பட்டது எப்படி..? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கொல்லம் – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாழடைந்த குளத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண்ணின் உடலுக்கு அருகில் இருந்த மது பாட்டில்கள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தென்காசி மாவட்டத்தில் யாரேனும் சமீபத்தில் காணாமல்போனார்களா என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

Read More : நகைக்கடன் வைக்க போறீங்களா..? பொதுத்துறை வங்கி vs தனியார் வங்கி..!! எது பெஸ்ட்..? தெரியாமல் கூட இந்த தவறை பண்ணிடாதீங்க..!!

English Summary

The discovery of a burnt body of a young woman in the Lathur area of ​​Tenkasi district has caused a stir.

Chella

Next Post

Night Shift Effects : நைட் ஷிப்ட் வேலை.. இந்த பிரச்சனையெல்லாம் வரும்..!! - எச்சரிக்கும் மருத்துவர் 

Tue Feb 11 , 2025
Night Shift Health Risks: These diseases are certain if you work night shifts.. Be careful boss!

You May Like