தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த 26 வயது இளைஞரை, மது குடிக்க அழைத்துச் சென்று பலமுறை கத்தியால் குத்தியும், ஆணுறுப்பையும் அறுத்தும் கொடூரமாக கொன்ற ரவுடி சிறையில் அடைக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவுடி லூவியரசன் (34). இவருக்கு கீர்த்தனா (26) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கீர்த்தனாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான அருண்குமார் (வயது 26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
தினமும் அடிக்கடி செல்போனில் இருவரும் பேசி வந்துள்ளது. மேலும், இருவரும் வெளியே சென்று உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதல் விவகாரம் எப்படியோ, கீர்த்தனாவின் கணவரும் ரவுடியுமான லூவியரசனுக்கு தெரியவந்துள்ளது. இதனால், அவர் இருவரையும் கண்டித்துள்ளார்.
ஆனால், கீர்த்தனா – அருண் குமார் இருவரும் தங்களது கள்ளக்காதலை தொடர்ந்து வளர்த்து வந்துள்ளனர். இதனால், லூவியரசனுக்கு கடும் கோபம் வந்துள்ளது. இதையடுத்து, அருண்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் லூவியரசன். அதன்படி, அருண்குமாரிடம் நைசாக பேசி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்திற்கு லூவியரசன் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், அங்கு இருவரும் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே கள்ளக்காதல் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஆத்திரமடைந்த கீர்த்தனாவின் கணவர் லூவியரசன், துணியால் அருண் குமாரின் கழுத்தை இறுக்கி, கத்தியால் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார்.
ஆனால், அப்போதும் ஆத்திரம் அடங்காத லூவியரசன் அருண்குமாரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார். இதனால், அருண்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து, அவரின் உடலை அங்கேயே விட்டுவிட்டு, நேரடியாக காவேரிப்பாக்கம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமாரின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், லூவியரசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.