fbpx

ரகசியமாக வீட்டிலேயே பாலியல் தொழில் செய்து வந்த கணவன் மனைவி….! காவல்துறை என்ன செய்தது தெரியுமா….?

சென்னை அருகே, வீட்டில் பாலியல் தொழிலை செய்து வந்த, கணவன், மனைவி உள்ளிட்டோரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வடசென்னை ராயபுரம் பகுதியில் அமைந்து இருக்கின்ற, ராஜவேல் தெருவின் குடியிருப்புகள் நிறைந்துள்ள ஒரு பகுதியில், அமைந்திருக்கின்ற ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடந்து வருவதாக, ராயபுரம் காவல் துறையினருக்கு ரகசியமாக தகவல் வந்தது. அதன்படி, அந்த பகுதிக்கு சென்று மகளிர் காவல் துறையினர் உதவியோடு, சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில், குறிப்பிட்ட அந்த வீட்டில், பாலியல் தொழில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை காவல்துறையினர் உறுதி செய்ததால், வீட்டில் தனிமையில் இருந்த நபர்கள் மற்றும் வீட்டிலேயே பாலியல் தொழில் நடத்தி வந்த கணவன், மனைவி உள்ளிட்ட இருவரையும், ராயபுரம் காவல் துறையினர் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர், கணவன்(45), மனைவி சித்ரா(37) என்ற விவரம் தெரியவந்துள்ளது ஆகவே கணவன், மனைவி இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர் காவல் துறையினர்.

Next Post

தமிழ்நாட்டில் இன்றும் இடி மின்னலுடன் மழை..!! மக்களே இதை மறந்துறாதீங்க..!! சூறாவளிக்காற்றும் இருக்காம்..!!

Tue Aug 15 , 2023
தமிழ்நாட்டில் இன்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த இரு தினங்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் நீர்தேங்கி நின்றது. மேலும், புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியிருந்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் […]

You May Like