fbpx

“அவளுடன் நானும் இறந்துவிட்டேன்..!” விஜய் ஆண்டனி உருக்கம்…!

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, செப்டம்பர் 19ஆம் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 12ஆம் வகுப்பு படிக்கும் அவர், கடந்த சில நாட்களாக கடுமையான மன உளைச்சளால் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகள் மீரா இழப்பால் மிகவும் வருத்தத்தில் விஜய் ஆண்டனி இருந்து வருவதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில் மகள் மீரா மறைவு குறித்து விஜய் ஆண்டனி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு சென்று இருக்கிறாள்.

என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துள்ளேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள். உங்கள் விஜய் ஆண்டனி” எனத் தெரிவித்துள்ளார்.

Kathir

Next Post

சாக்ஸ் அணியாமல் ஷூ போடுபவர்களா நீங்கள்?… கட்டாயம் இதை தெரிந்துகொள்ளுங்கள்!

Thu Sep 21 , 2023
வாழ்க்கை முறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்று அனைத்திலும் முன்னேற்றம் கண்டுவருகிறோம். இப்படி இருக்கையில் மக்கள் நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் மாறி வருகின்றனர். அந்தவகையில், காற்றோட்டமாக இருக்கும் காலணிகளுக்குப் பதிலாக, இன்று நகர்ப்புறங்களில் மிக முக்கியமான டிரெஸ் கோடாகவே மாறிவிட்டது ஷூ அணிவது. அலுவலக வாசலில் நிற்கும் காவலர் முதல் சி.இ.ஓ வரை இன்று அனைவருமே ஷூ அணிகிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள் மட்டுமின்றி, பள்ளி செல்லும் குழந்தைகள், காவலர்கள், மார்க்கெட்டிங் […]

You May Like