fbpx

சென்னையில் 2-வது நாளாக தொடரும் ஐடி சோதனை..!! பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..?

சென்னை பார்க் டவுன் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் மருந்து நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, மருந்து பொருட்கள் மற்றும் ரசாயன தயாரிப்பு ஆலை, கிடங்குகள், அதன் உரிமையாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மருந்து குடோனிலும், ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்க் தெருவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பரிசோதனை கூடத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள 2 நிறுவனங்கள், வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும், மாதவரத்தில் உள்ள குடோன், தண்டையார்பேட்டை, மன்னடி, தம்பு செட்டி தெரு, தங்கசாலையில் உள்ள கிளை நிறுவனங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டம் குடிகாடு சிப்காட் பகுதியில் இயங்கி வரும் மருந்து நிறுவனத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chella

Next Post

என்ன லோகேஷ் இப்படி பண்ணிட்டீங்க..!! இரண்டாம் பாதியில் சொதப்பலா..? ரசிகர்கள் ஏமாற்றம்..!!

Thu Oct 19 , 2023
தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. அதேபோல கேரளாவில் 3.50-க்கு லியோ படத்தின் முதல் காட்சி பெருமளவில் திரையிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் LCU இல் இணைந்துள்ளது. ‘லியோ’ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், […]

You May Like