fbpx

கவனம்…! 12-ம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறினால் ரூ.1000 செலுத்த வேண்டும்…!

12-ம் வகுப்பு துணை தேர்வுக்கு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் மே 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வு துறை அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்வு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 12-ம் வகுப்புக்கான உடனடி துணை தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விருப்பம் உள்ள தனி தேர்வர்கள், பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மே 14 முதல் 29-ம் தேதிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். தனி தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 30, 31-ம் தேதிகளில் தட்கல் திட்டம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கு, தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டாம். விரிவான தேர்வு கால அட்டவணை, கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்திதான் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: உங்கள் ரூபாய் நோட்டு கிழிஞ்சிருக்கா..? அதை மாற்ற கஷ்டப்படுறீங்களா..? ஈசியான வழி இதோ..!!

English Summary

If you fail to apply for the 12th standard supplementary exam, you will have to pay Rs. 1000.

Vignesh

Next Post

போலி மாம்பழங்களை நம்பி ஏமாறாதீர்கள்!. கார்பைடு பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டதை எப்படி கண்டுபிடிப்பது?

Sat May 10 , 2025
Don't be fooled by fake mangoes! How to identify those ripened using carbide?

You May Like