fbpx

இனி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால்..!! அமைச்சர் செந்தில் பாலாஜி வார்னிங்..!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகாரை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் எந்தெந்த டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து புகார் அளிக்கப்பட்டால் அதற்கான நடவடிக்கை உடனே எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதுவரை 1,977 பேர் மீது நடவடிக்கை எடுத்து 5.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் நபர்களை பாதுகாக்க ஒரு சில தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்துவதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு ஊழல் நடைபெற்று வருவதாகவும் அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

பெண்களுக்கான சூப்பர் திட்டம்..!! 2 ஆண்டுகள் மட்டும்தான்..!! வட்டி எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?

Fri May 19 , 2023
நடப்பு நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார். அப்போது பெண்களுக்காக மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், இந்த திட்டத்தில் பெண்கள் மட்டுமே இணைய முடியும் எனவும் இத்திட்டத்தில் சேர்ந்தால் ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படும் எனவும் […]

You May Like