ஒரிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தை முன்னிட்டு சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது உரையாற்றிய அவர், ரயில் விபத்து குறித்து முழுமையான விவரங்கள் இன்று மாலைக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என கூறினார். மேலும் 2 அமைச்சர்கள் கொண்ட குழுவும் ஒடிசா சென்றுள்ளது. அதேபோல 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 2 துணை ஆட்சியர்கள், 4 தாசில்தார்கள் கொண்ட அதிகாரிகள் குழுவும் ஒடிசா விரைந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இதுவரையில் 8 பேர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு உள்ளனர். நாங்கள் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த 127 பேருடன் பேசி உள்ளோம் அதேபோல ஹவுரா விரைவு ரயிலில் பயணித்த 5 பேருடனும் உரையாற்றியுள்ளோம். அவர்கள் எல்லோரையும் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு மீட்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகத்திற்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.