இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த உத்தரவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ பாகிஸ்தானையே ஸ்தம்பிக்க வைத்தது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக நள்ளிரவில் இந்திய எல்லைகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்கி வருகிறது. ஆனால், இந்திய ராணுவம் விடாமல் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தது.
இந்நிலையில் தரை, வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல் நடத்துவதை இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதாகவும், இந்த நடக்காடிக்கை இன்று மாலை 5.00 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். அமைதி நிலைத்திருக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவில், “இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு ஒற்றுமையுடன் அணிவகுத்தது. போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது – அமைதி நிலைத்திருக்கட்டும். நமது எல்லைகளைக் காக்கும் துணிச்சலுக்கு எங்கள் மனமார்ந்த வணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
Tamil Nadu marched in solidarity with the #IndianArmedForces.
— M.K.Stalin (@mkstalin) May 10, 2025
The ceasefire is a welcome step — may peace endure. Our heartfelt salute to the courage of those who guard our borders.@adgpi @HQ_IDS_India @DefenceMinIndia pic.twitter.com/T6YoIiNmwO
பாகிஸ்தானின் தாக்குதலை துணிவுடன் எதிர்கொள்ளும் இந்திய ராணுவ படைகளுக்கு ஆதரவாக சென்னையில், டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை, சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு பேரணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.