இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டு உலக பொருளாதார சூழலால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதேசமயம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரியால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவானது. இதனால், தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
இந்த சூழலில் தான், தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், அதன் தாக்கம் தங்கத்திலும் எதிரொலித்துள்ளது. நேற்று (மே 9) ஒரு கிராம் தங்கம் ரூ.9,015-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.72,120-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று (மே 10) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.72,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து, ரூ.9,045க்கும் விற்பனையாகிறது. அதேசமயம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ,1,10,000-க்கும் விற்பனையாகிறது.