fbpx

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி-பாராட்டிய மோடி

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின், பெர்லினில் நடந்து வருகிறது. இதில் கூட்டு பெண்கள் பிரிவின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்திய அணியான ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத் கவுர் ஆகியோர், மெக்சிகோ அணியான டாப்னே குயின்டெரோ, அனா சோபியா ஹெர்னாண்டஸ் ஜியோன், ஆண்ட்ரியா பெசெரா ஆகியோரை எதிர்கொண்டனர். இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள் மூவரும் சிறப்பாக செயல்பட்டனர் . இதனால் 235 -229 என்ற புள்ளி கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி இந்திய அணியினர் தங்கம் வென்றனர்.

வெற்றி பெற்ற இந்திய அணியை வாழ்த்தி பிரதமர் மோடி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் இந்திய வீராங்கனைகள் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத் கவுர் ஆகியோர் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் நாட்டிற்கு முதல் தங்கத்தை தேடி தந்து மூவரும் சாதனை படைத்துள்ளனர். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தருணம். எங்கள் சாம்பியன்களுக்கு வாழ்த்துகள்! வீராங்கனைகளின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தான் வெற்றிக்கு வழி வகுத்தது என கூறியுள்ளார்.

Maha

Next Post

பெற்றோரிடம் தெரிவிக்காமலேயே குழந்தைகளின் பெயர் நீக்கம்..!! உடனே இந்த பிரச்சனை என்னன்னு பாருங்க..!!

Sat Aug 5 , 2023
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகளில் குழந்தைகளின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஆதாரை இணைக்கவில்லை என்று கூறி குழந்தைகளின் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 2 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரத்து 246 ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. இந்த கார்டுகளுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் விநியோகிகப்படுகிறது. தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் எல்லாம் ஸ்மார்ட் கார்டுகளாக மாறிய பின்னர், பொருட்கள் வழங்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் […]

You May Like