fbpx

பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு இப்படி ஒரு தேர்வா?… பாலியல் கற்பனை குறித்து கதை எழுதவேண்டும்!…

பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு, தங்கள் பாலியல் கற்பனையை விவரிக்கும் படி கட்டுரை ஒன்றை எழுத வேண்டும் என்று அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவரின் மின்னஞ்சல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள யூஜினில் சர்ச்சில் என்ற உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில், மார்ச் 13ம் தேதி அன்று பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு, மாணவர்கள் தங்களின் பாலியல் கற்பனையை விவரிக்கும் படி கட்டுரை ஒன்றை எழுத வேண்டும் என்று ஆசிரியர் ஒருவர் மின்னஞ்சல் (ட்விட்டர்) அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சல் பதிவில், உடலுறவை பற்றி வெளிப்படையாக எழுதக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு, ஒரு கட்டுரை எழுதவேண்டும்.

இந்தக் கதை ஒரு பாலியல் கற்பனையாகும். இதில் எந்த வகையான உடலுறவு பற்றி வெளிப்படையாக இருக்கக் கூடாது. உங்கள் கதையில் பயன்படுத்த 3 பொருட்களை (காதல் இசை, மெழுகுவர்த்திகள், மசாஜ் எண்ணெய், இறகு, சுவையூட்டப்பட்ட சிரப் போன்றவை) தேர்வு செய்யவேண்டும். உடலுறவு கொள்ளாமலேயே நீங்கள் அன்பான உடல் பாசத்தைக் காட்டவும் பெறவும் முடியும் என்பதை உங்கள் கதை காட்ட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியரின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகிவரும் நிலையில், இதனை ஏறக்குறைய 5.4 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். இருப்பினும், இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

வெறும் 27 நிமிடங்களில் இன்ஃப்ளூயன்ஸா, கொரோனா வைரஸை கண்டறியலாம்.. புதிய பரிசோதனை கருவிக்கு ICMR ஒப்புதல்

Fri Mar 17 , 2023
இந்தியாவில் தற்போது 3 வகை காய்ச்சல் பரவி வருகிறது.. நாடு முழுவதும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பதிவாகி உள்ளது.. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். H3N2 வைரஸால் நாட்டில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக டெல்லி உட்பட வட இந்தியா முழுவதும் அடினோவைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. குறிப்பாக மேற்கு வங்கத்தில், இந்த வைரஸின் அதிகபட்ச பாதிப்பு இதுவரை பதிவாகியுள்ளன. இந்தக் காய்ச்சலால் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.. […]

You May Like