குஜராத் மாநிலம் தாபி நகரில் வசித்து வந்த கணேஷும், ரஞ்சனாவும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் மனம் உடைந்தனர்.
விரக்தியில் இருந்த இருவரும் தற்கொலை முடிவை நோக்கி காதல் ஜோடி தூக்கில் தொங்கி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இருவரும் இறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், காதல் ஜோடி சேர்ந்து வாழ முடியாததற்கு நாங்கள் தான் காரணம் என குடும்பத்தினர் மிகவும் மனம் வருந்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கணேஷ் மற்றும் ரஞ்சனாவிற்கு குடும்பத்தினருக்கு சிலை வைத்தனர். மேலும் சிலைக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். இதனை பற்றி அவர்களிடம் கேட்ட போது, உயிரிழந்த காதலர்களின் ஆன்மா சாந்தியடையவே செய்தோம் என்று கூறியுள்ளார்.
மேலும் உயிருடன் இருந்த போது அவர்களின் ஆசையை நிராகரித்த நிலையில், இப்போது அந்த ஆசையை நாங்கள் நிறைவேற்றுவதற்காக இதனை செய்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கணேஷ் தங்களுக்கு தூரத்து உறவினர் என்றும், அவர் திருமணத்திற்கு தயாராகவில்லை என்ற காரணத்தினாலும் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததாக ரஞ்சனாவின் தாத்தா கூறியுள்ளார்.