fbpx

போக்குவரத்தில் மாற்றம்…! இன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மட்டுமே..‌‌‌‌.! காவல்துறை அறிவிப்பு…

திண்டுக்கல்லில் இன்று நடக்க இருக்கும் காந்தி கிராமம் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி மதுரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலம், பிற மாவட்டங்களில் இருந்து மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்து கீழ்கண்ட மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மதுரை மாநகரில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு மதுரையில் இருந்து அலங்காநல்லூர், பாலமேடு, இராஜாக்கால்பட்டி, முளையூர், நரசிங்கபுரம் வழியாக திண்டுக்கல் செல்லவேண்டும் (அல்லது)மதுரையில் இருந்து பாத்திமா கல்லூரி வழியாக அலங்காநல்லூர் கேட்டுக்கடை, எம்.சத்திரப்பட்டி, நத்தம், வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும்.

இருசக்கர வாகனம் ஓட்டும் சிறுவர்கள்..! எச்சரிக்கும் காவல்துறை..! பெற்றோர்களே உஷார்

மதுரை மாநகரில் இருந்து தேனி செல்வதற்கு பாத்திமா கல்லூரி வழியாக பரவை, சமயநல்லூர் (நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழ்), தேனூர் ரோடு மேலக்கால், செக்கனுராணி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக தேனி செல்ல வேண்டும்.

இராஜபாளையத்தில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு தே.கல்லுப்பட்டி சந்திப்பில் இருந்து பேரையூர், சேடப்பட்டி, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, செம்பட்டி வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும்.

இராஜபாளையத்தில் இருந்து மதுரை மாநகருக்கு செல்வதற்கு கள்ளிக்குடி சந்திப்பில் இருந்து காரியப்பட்டி, ஆவியூர், பாரப்பத்தி, எலியார்பத்தி டோல் கேட், வலையங்குளம் சந்திப்பு, சோழன்குருனி சந்திப்பு, விராதனூர், சிந்தாமணி டோல் கேட் வழியாக மதுரை மாநகருக்குள் செல்ல வேண்டும்.

திருச்சியில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு செல்வதற்கு இராமநாதபுரம் ரிங்ரோடு சந்திப்பில் இருந்து திருப்புவனம், அல்லிநகரம் சந்திப்பு, புல்வாய்கரை சந்திப்பு, தொட்டியங்குளம் சந்திப்பு, திம்மாபுரம், முண்டக்குறிச்சி, மீனாட்சிபுரம், காரியப்பட்டி வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும்.

திருநெல்வேலியில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பில் இருந்து காரியப்பட்டி, எலியார்பத்தி டோல்கேட், வளையங்குளம் சந்திப்பு, சிந்தாமணி மற்றும் மதுரை மாநகர் பகுதியில் உள்ள டோல் கேட் வழியாக செல்லவேண்டும். 7. விருதுநகரில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பில் இருந்து காரியாபட்டி, எலியார்பத்தி டோல்கேட், வளையங்குளம் சந்திப்பு, சிந்தாமணி மற்றும் மதுரை நகர் பகுதியில் உள்ள டோல் கேட் வழியாக செல்ல வேண்டும்.

திருநெல்வேலி மற்றும் விருதுநகரில் இருந்து தினர்டுக்கல் மற்றும் பழனி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பில் தே.கல்லுப்பட்டி, பேரையூர் சந்திப்பு, உசிலம்பட்டி சந்திப்பு, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும் (அல்லது) கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, உசிலம்பட்டி சந்திப்பு, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும்.

மதுரை நகரில் பகுதியில் இருந்து திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம், கொடைக்கானல் மற்றும் கோயமுத்தூர் செல்லும் வாகனங்கள் மதுரையில் இருந்து பாத்திமா கல்லூரி வழியாக பரவை, சமயநல்லூர், தேனூர், சோழவந்தான், கரப்பட்டி, பள்ளப்பட்டி, நிலக்கோட்டை மற்றும் செம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.

விருதுநகர், திருநெல்வேலி, செங்கோட்டையில் இருந்து திண்டுக்கல் மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் திருமங்கலம் உசிலம்பட்டி ரோடு தி.விலக்கு, உசிலம்பட்டி வழியாக செல்லவேண்டும். சந்திப்பில் இருந்து சிந்துப்பட்டி, மேற்கண்ட வழிதடம் வழியாக செல்லவேண்டும் எனவும், எக்காரணம் கொண்டும் மதுரை மாநகருக்குள் செல்லக்கூடாது என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தகவல் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அதிரடி...! அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்…! இன்று காலை 10 மணி முதல்…! மிஸ் பண்ணிடாதீங்க...

Fri Nov 11 , 2022
மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின்‌ 2-ம்‌ மற்றும்‌ 4-ம்‌ வெள்ளிக்கிழமைகளில்‌ நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்குத்‌ தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவசப்பணியே ஆகும்‌. இதன்‌ மூலம்‌ தனியார்துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவானது ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத்‌ துறைகளில்‌ அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத்‌ […]

You May Like