எதிரிகளின் தாக்குதல் நடைபெறும் நேரத்தில் முக்கிய மின்னுற்பத்தி கேந்திரங்களை பாதுகாக்கவும், பொதுமக்கள் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மே 7 ஆம் தேதி நாடு தழுவிய போர் பதற்ற ஒத்திகை நடத்துமாறு உள்துறை அமைச்சகம் (MHA) பல மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, மே 7-ஆம் தேதி நாடு முழுவதும் போர் பதற்றம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்துறை அமைச்சகம் (MHA) பல மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது, எதிர்பாராத தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான தயாரிப்பை மதிப்பீடு செய்யும் முக்கிய நடவடிக்கையாக அமைகிறது.
சைரன்கள் செயல்படுத்தல்: வான்வழித் தாக்குதல்கள் அல்லது ஏவுகணை தாக்குதல்களுக்கான எச்சரிக்கை சைரன்கள் முழுவதும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன. இவை முக்கிய இடங்களில் நிறுவப்பட்டு, நொடியில் செயல்படும் வகையில் பரிசோதிக்கப்படுகின்றன.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு பயிற்சி: பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு முதற்கட்ட மருத்துவ உதவி, தஞ்சம் அடையும் நடைமுறை, எச்சரிக்கை சின்னங்களை அடையாளம் காணும் பயிற்சி, மற்றும் பயப்படாமல் வெளியேறும் நடைமுறைகள் போன்ற முக்கிய பாதுகாப்பு வழிமுறைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
‘கிராஷ் பிளாக் அவுட்’ நடைமுறை: போர் நேரத்தில் எதிரி விமானங்களின் கண்களுக்கு நாட்டின் முக்கிய இடங்கள் தெரியாமல் இருக்க, ஒளி நீக்கம் (Blackout) நடைமுறைகள் சோதிக்கப்படுகின்றன. இதற்காக தானியங்கி ஒளி நிறுத்த அமைப்புகள் உள்ள இடங்களில் சேவைகள் சோதிக்கப்படுகின்றன.
முக்கிய தளங்களுக்கு பாதுகாப்பு: மின்சார நிலையங்கள், ராணுவ கிடங்குகள், தொலைத் தொடர்பு மையங்கள் போன்ற முக்கிய கட்டமைப்புகளை எதிரியின் கண்களில் படாமல் பாதுகாக்க, மறைமுகக் கவசங்கள், ஒளி மற்றும் ஒலி தடுப்புகள் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த அனைத்து நடவடிக்கைகளும், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தயார் நிலையில் சீரான முன்னேற்றம் மற்றும் போர் கால சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான தயாரிப்பு என பிரதிபலிக்கின்றன. இந்த ஒத்திகை, பாகிஸ்தான் ஆதரவு கொண்ட தீவிரவாத குழுக்களால் ஏற்படுத்தப்படும் ஆபத்துகளை எதிர்கொள்ள அரசு எடுக்கும் முக்கிய முன்னெச்சரிக்கைக் கட்டுப்பாடாகும்.
Read more: பஹல்காம் பயங்கரவாதிக்கு பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி..!! NIA விசாரணையில் திடுக் தகவல்..