fbpx

நெல்லை, தூத்துக்குடிக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கையா..? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..!!

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பை சந்தித்தன. தற்போது வரை மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 27ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chella

Next Post

”அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு”..!! நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..!!

Fri Dec 22 , 2023
அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக நெல்லை மாவட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளையும் மழைநீா் சூழ்ந்தது. மாநகராட்சியினரும், மீட்புக்குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தற்போது போக்குவரத்து மெல்லமெல்ல சீராகி வருகின்றன. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜனவரி […]

You May Like