தமிழகத்தின் சென்னையிலிருந்து சட்ட விரோதமாக தங்க பிஸ்கட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று திருப்பதி அருகே உள்ள நாயுடு பேட்டா மற்றும் சூலூர் பேட்டா காவல்துறையினர் ஆந்திர மற்றும் தமிழக எல்லையில் திருப்பதி மாவட்டம் சூலூர் பேட்டாவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்படி நடத்திய சோதனையில், சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த ஒரு காரை சோதனை செய்தனர்.
அந்தக் காரில் 5 கிலோ தங்க பிஸ்கட்டுகள் எந்த விதமான ஆவணங்களும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது .இதனைத் தொடர்ந்து, 5 கிலோ தங்கபிஸ்கட்டுகளை காருடன் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதோடு, இது குறித்து ஒருவரை சூலூர் பேட்டா காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.