fbpx

தமிழக மற்றும் ஆந்திர எல்லையில் 5 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்….! திருப்பதி அருகே பரபரப்பு…..!

தமிழகத்தின் சென்னையிலிருந்து சட்ட விரோதமாக தங்க பிஸ்கட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று திருப்பதி அருகே உள்ள நாயுடு பேட்டா மற்றும் சூலூர் பேட்டா காவல்துறையினர் ஆந்திர மற்றும் தமிழக எல்லையில் திருப்பதி மாவட்டம் சூலூர் பேட்டாவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்படி நடத்திய சோதனையில், சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த ஒரு காரை சோதனை செய்தனர்.

அந்தக் காரில் 5 கிலோ தங்க பிஸ்கட்டுகள் எந்த விதமான ஆவணங்களும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது .இதனைத் தொடர்ந்து, 5 கிலோ தங்கபிஸ்கட்டுகளை காருடன் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதோடு, இது குறித்து ஒருவரை சூலூர் பேட்டா காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Post

திருமண தகவல் மையம் மூலமாக இளம்பெண்ணை ஏமாற்றிய டெல்லி இளைஞர்…..! நகை பணம் திருட்டு காவல்துறையிடம் புகார்….!

Thu May 11 , 2023
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 39 வயதான இவர் திருமண வரன் வேண்டி தன்னுடைய பெயரை இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். 15 நாட்களுக்கு முன்னர் அன்ஷூல் ஜெயின் என்ற பெயரில் டெல்லியில் இருந்து இளைஞர் ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார். டெல்லியில் நடைபெற உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சியில் பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று தெரிவித்து அந்த பெண்ணை அழைத்துள்ளார். […]
’ஞாயிற்றுக்கிழமை உங்க விருப்பம்தான்’..!! ஏமாற்றி திருமணம் செய்த நபருக்கு இப்படி ஒரு தீர்ப்பா..?

You May Like