தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. ஒருபுறம் வெயில் வரலாறு காணாத அளவிற்கு இருந்தாலும் மறுபுறம் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
தற்சமயம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதோடு இது புயலாக உருமாற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த விதத்தில் சரியாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டு இருக்கும் இந்த காற்றின் சுழற்சி எதிர்வரும் 6 அல்லது 7ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து, வரும் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் அந்த காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக மாறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்சமயம் இது ஒடிசாவை நோக்கி நகரலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் காற்றின் வேகத்தை பொறுத்து இதன் திசை மாறுபடலாம் ஆகவே தமிழகத்திலும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தகவல் கிடைத்திருக்கிறது.
ஒரு வேலை இந்த புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு மோக்கா என்று பெயரிடப்படும் இந்த பெயரை ஏமன் நாடு சூட்டி இருக்கிறது. இதனால் மீனவர்கள் வரும் ஏழாம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.