ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த ரசிகர்களும், அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடினார்கள்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா இந்தப் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். இந்தியா வெற்றி அடைந்ததும் அவர் கைதட்டி கொண்டாடினார். அப்போது ஒருவர் ஜெய்ஷா கையில் தேசிய கொடியை கொடுக்க வந்தார். ஆனால் ஜெய்ஷா தேசிய கொடியை வாங்க மறுத்துவிட்டார். ஜெய்ஷா தேசிய கொடியை வாங்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெய்ஷா தேசிய கொடியை வாங்கமறுக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
எதிர்க்கட்சியினர் இந்த வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக ஜெய்ஷாவை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த படி டி.ஆர்.எஸ். தலைவர் ஒருவர் கூறும்போது, இதுவே பாரதிய ஜனதாவை சேராத ஒருவர் கொடியை ஏற்க மறுத்து இருந்தால் அந்த நபர் தேச விரோதி ஆக்கப்பட்டு இருப்பார் என பதிவிட்டிருந்தார்.