fbpx

கோயமுத்தூரில் ஒரே வாரத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி…..!

தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு நாட்கள் செல்ல, செல்ல அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 100க்கும் குறைவாக இருந்த நோய் தொற்று பாதிப்பு தற்சமயம் 300ஐ தாண்டி உள்ளது. நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல, மெல்ல அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வாரத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இத்தகைய நிலையில் இந்த மருத்துவமனையில் நோய் தொற்று சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல இந்த நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த விதத்தில் கோவை அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் மூன்று பேர் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள்.

Next Post

மீண்டும் பாக்கியலட்சுமியுடன் இணைய போகிறாரா கோபி….? பாக்கியலட்சுமி சீரியலில் நடைபெற உள்ள அடுத்தடுத்த திருப்பங்கள்…..!

Sun Apr 9 , 2023
பாக்கியலட்சுமி தொடரில் தன்னுடைய மகள் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதால் மனம் உடைந்து போன கோபி மது குடித்துவிட்டு தெருவோரத்தில் விழுந்து கிடந்தார். அவரை அவருடைய முன்னாள் மனைவி பாக்கியலட்சுமி தான் வீட்டிற்கு அழைத்து வந்து சேர்த்தார். இதன் காரணமாக ராதிகா கடும் கோபத்திற்கு ஆளானார். அதன் பிறகு போதையில் இருந்த கோபி ராதிகாவை திட்டி உள்ளார். கோபி தன்னைத் திட்டியதால் கோபமடைந்த ராதிகா வீட்டை விட்டு வெளியேறினார். […]

You May Like