கோடை காலம் தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்திலும் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது வானிலை மாறி அவ்வப்போது பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில், பகுதியில் காலைல இருந்து அதிக அளவில் வெயில் இருந்து வந்தது. இந்த நிலையில் இரவு நேரத்தில் சென்ற இரு தினங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
அத்துடன் நள்ளிரவில் கனமழை பெய்ததால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நெசவாளர் காலனி மற்றும் இன்னும் பல பகுதிகளில் ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் அந்த பகுதி மக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் தான் சங்கரன்கோவிலில் 2வது நாளாக நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது இதற்கு நடுவில் அடுத்த ஒரு வாரத்திற்கு மதியத்திற்கு மேல் மழை பெய்வதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.