fbpx

குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம் 4 வயது கைக்குழந்தை முதல் குடும்பத்தைச் சார்ந்த 5 பேரை வெட்டி கொன்ற தந்தையும் தற்கொலை! திருவண்ணாமலையில் பரபரப்பு!

தமிழகம் முதன்மை மாநிலமாக இல்லாவிட்டாலும் கடை நிலைக்கு சென்று விடக்கூடாது என்பது தான் தற்போது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.தமிழகத்தில் கொலை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்களுக்கு முதன்மை காரணமாக இருந்து வருவது மது மட்டும்தான். இந்த மது மட்டும் இல்லாவிட்டால் தமிழகத்தில் இது போன்ற குற்ற செயல்களை மிகவும் சுலபமாக தடுத்து விடமுடியும்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், உரவந்தவாடி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி(40). இவர் நேற்று நள்ளிரவு தன்னுடைய மனைவி வள்ளி(37), மகள்கள் திரிஷா(15), மோனிஷா(14), சிவசக்தி(6), மகன் தனுஷ்(4) உள்ளிட்ட 5 பேரை வெட்டி கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மற்றொரு மகளான பூமிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக, இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்திருக்கிறது. இது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்த தகவல்தான். ஆனால் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

Next Post

நாட்டில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள்! உரிமையாளருக்கே தெரியாமல் வங்கிக் கணக்கிலிருந்து காணாமல் போன பணம்!

Tue Dec 13 , 2022
தற்போது இந்த நவீன காலத்தில் கைபேசியிலேயே அனைத்தும் அடங்கி விட்டது. ஒரு கைபேசி மட்டும் கையில் இருந்தால் போதும், உலகில் நாம் எங்கிருந்தாலும் நம்மால் இருந்த இடத்திலிருந்து நினைத்ததை செய்து முடிக்க முடியும் என்ற அளவிற்கு வந்துவிட்டது. அந்தளவிற்கு இந்த கைபேசிகளின் மூலமாக அனைவரின் உள்ளங்கையிலும் உலகம் அடங்கி விட்டது. ஆனால் நவீன முறை என்று சொல்லிக்கொண்டு அனைத்து வேலைகளையும் சுருக்கமாக செய்து முடிப்பது பல அபாயங்களையும் சந்திக்கத்தான் செய்கிறது. […]

You May Like