சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம். இவருடைய மகன் உதயசங்கர்(30) இவர் வெள்ளிப் பட்டறையில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் பாஜகவின் மாநகர இளைஞரணி செயலாளராக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், நேற்று மாலை பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதயசங்கரை வெட்ட முயற்சி செய்தது. இதனைக் கண்ட அவர், உயிர் பயத்தில் ஓடத் தொடங்கினார்.
இருந்தாலும் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டிச் சென்று நடுரோட்டில் சரமாரியாக வெட்டி உள்ளது. இதனை தொடர்ந்து, அந்த கும்பல் அங்கு இருந்து தப்பிச்சென்றனர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உதயசங்கரை அந்த பகுதி மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கிய அந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அதோடு அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக, இந்த பலனை நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.