சமீபத்தில் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி 8,36,593 மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் 97 சதவீதம் என்று கூறப்படுகிறது.
அதேபோல வழங்கும் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். சென்ற வருடம் இந்த எண்ணிக்கை 5.36 சதவீதமாக இருந்தது.
சென்ற வருடம் நடைபெற்ற 12ம் வகுப்பு பொது தேர்வில் 8,06,277 மாணவர்கள் எழுதிய நிலையில், 7,55,997 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் 93.76 சதவீதமாக இருந்தது. மாநிலத்தில் உள்ள 7533 மேல்நிலைப் பள்ளிகளில் 2767 மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்திருக்கின்றன. இதில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 326 ஆக இருக்கிறது.