fbpx

விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பரிதாப பலி…..! ஆபத்தான நிலையில் 8க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை…!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள எக்கியார் குப்பத்தில் கலாச்சாராயம் விற்கப்பட்டிருக்கிறது. இதனை வாங்கி குடித்த சுமார் 7 பேர் வீட்டிற்கு சென்ற பின்னர் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், சங்கர் மற்றும் தரணிதரன் உள்ளிட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதற்கு நடுவே காவல்துறையினர் கிராமப்புறங்களில் நடத்திய விசாரணையில், எக்கியார்குப்பம் கிராமத்தில் மேலும் 4 பேர் மயங்கி கிடந்தது தெரியவந்தது. ஆகவே அவர்களை காவல் துறையினரின் வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஒட்டுமொத்தமாக தற்போது 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இத்தகைய நிலையில், தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்கள் அவர்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

Next Post

கள்ளச்சாராயம் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவம் காவல்துறை ஆய்வாளர்கள் அதிரடி பணியிடை நீக்கம்…..! டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு…!

Sun May 14 , 2023
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியர் குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மூவர் கலாச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதன் காரணமாக, எக்கியர் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க வேண்டும் என்று மீனவ கிராம வாசிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் ஒன்று திரண்டனர். அந்த கிராமத்தில் உள்ள பூமீஸ்வரர் ஆலயம் பேருந்து நிறுத்தம் அருகே அவர்கள் கண்ணீர் […]

You May Like