விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள எக்கியார் குப்பத்தில் கலாச்சாராயம் விற்கப்பட்டிருக்கிறது. இதனை வாங்கி குடித்த சுமார் 7 பேர் வீட்டிற்கு சென்ற பின்னர் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், சங்கர் மற்றும் தரணிதரன் உள்ளிட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதற்கு நடுவே காவல்துறையினர் கிராமப்புறங்களில் நடத்திய விசாரணையில், எக்கியார்குப்பம் கிராமத்தில் மேலும் 4 பேர் மயங்கி கிடந்தது தெரியவந்தது. ஆகவே அவர்களை காவல் துறையினரின் வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஒட்டுமொத்தமாக தற்போது 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இத்தகைய நிலையில், தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்கள் அவர்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.