கடந்த சில வருடங்களாக சைபர் மோசடி அதிகரித்து வருகிறது. இந்த சைபர் குற்றவாளிகள் அப்பாவிகளை ஏமாற்ற பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். சமீபத்தில், இந்த மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் பயனர்களை குறிவைத்து ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். பயனர்களை ஏமாற்றி, தனிப்பட்ட தரவைத் திருடி, வங்கிக் கணக்குகளை நொடிகளில் காலி செய்யக்கூடிய அந்த ஆபத்தான தீம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த புகைப்பட மோசடி எப்படி வேலை செய்கிறது?
* தெரியாத எண்ணிலிருந்து புகைப்படத்துடன் கூடிய வாட்ஸ்அப் செய்தி பயனர்களின் செல்போனுக்கு அனுப்ப படுகிறது.
* இந்தப் படங்கள் மீம்ஸ்கள், வாழ்த்துகள் அல்லது ஃபார்வர்டுகள் போல சாதாரணமான மெசெஜாக இருக்கலாம். ஆனால் அவற்றில் மறைக்கப்பட்ட தீம்பொருள் குறியீடு உள்ளது.
* புகைப்படத்தை க்ளிக் செய்தவுடன், அந்த தீம்பொருள் பயனரின் ஸ்மார்ட்போனில் அமைதியாக இன்ஸ்டால் ஆகிறது. இது உங்கள் சாதனத்தை ஹேக்கர்களுக்கு அணுக அனுமதிக்கிறது.
* அந்த தீம்பொருள் (malware) உங்கள் மொபைலில் இருக்கும் விசை அழுத்தங்களை (keystrokes) தொடர்ந்து கண்காணிக்கிறது. இதன் மூலம், நீங்கள் என்ன டைப் செய்றீங்கள்.. வங்கியின் கடவுச்சொற்கள், மற்றும் ஒருமுறை கடவுச்சொற்கள் (OTP) அனைத்தையும் திருட முடிகிறது.
* இந்த மோசடிகள் இரண்டு காரணி அங்கீகாரத்தைத் தவிர்த்து, உங்கள் கணக்கிலிருந்து பணத்தை அமைதியாக திருடும்.
யார் குறிவைக்கப்படுகிறார்கள்? சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகையில், ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் இருவரும் ஆபத்தில் உள்ளனர். இந்த மோசடிகள் பெரும்பாலும் பண்டிகை காலங்கள், பெரிய விற்பனை நிகழ்வுகள் அல்லது முக்கிய செய்தி நிகழ்வுகளின் போது நடக்கிறது.
வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?
* தெரியாத எண்ணில் இருந்து வரும் புகைப்படங்கள், கோப்புகளை ஒருபோதும் பதிவிறக்க வேண்டாம்.
* அனுப்பப்படும் படங்கள் தானாகவே பதிவிறக்கம் ஆகாத வகையில், மீடியா தானியங்கி பதிவிறக்கம் அதாவது Media Auto Download அமைப்பை ஆப் செய்யவும்.
* உங்கள் தொலைபேசியின் வைரஸ் தடுப்பு மென்பொருளை தவறாமல் புதுப்பிக்கவும்.
* சந்தேகத்திற்கிடமான மெசேஜ்கள் வந்தால் உடனடியாக அந்த அக்கவுண்டை Report செய்து ப்ளாக் செய்யவும்.
இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C), செய்தி தளங்களைப் பயன்படுத்தும் போது பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இந்த மோசடி, வளர்ந்து வரும் சைபர் தாக்குதல்களின் நுட்பத்தை எடுத்துக்காட்டுகிறது. வாட்ஸ்அப் பயனர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
Read more: யார் கிட்ட பேசிட்டு இருக்க..? மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!