fbpx

’சூப்பர் மார்க்கெட்டாக மாறும் ரேஷன் கடைகள்’..! ’இனி அனைத்து மளிகைப் பொருட்களும் விற்பனை’..!

தமிழக ரேஷன் கடைகளில் சூப்பர் மார்க்கெட் போன்று மளிகை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 35,323 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 10,279 பகுதி நேர கடைகள் அடங்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை தரமானதாக வழங்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக அவ்வப்போது ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உணவு மற்றும் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ரேஷன் கடைகளுக்கு திடீர் விசிட் செய்து மக்களிடம் குறைகளை கேட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ரேஷன் கடைகளை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

ரேஷன் கடைகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது? மக்கள் கருத்து என்ன?  #VikatanPollResults | Vikatan Poll regarding ration shops during this  lockdown

இதன் ஒரு கட்டமாக வாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்டி கொடுக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. நிதி நிலைமைக்கு ஏற்ப ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணிகளையும் இவர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி புதிதாக கட்டப்படும் அனைத்து ரேஷன் கடைகளின் முகப்பு தோற்றமும் ஒரே வடிவத்தில் ஒரே கலரில் இருக்கும் வகையில் கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளை நவீனப்படுத்தும் வகையில் இன்னும் என்னென்ன வசதிகளை செய்து கொடுக்கலாம் என்ற பட்டியலும் தயாரித்து உள்ளனர்.

அச்சச்சோ.. 3 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது.! அரசு ஊழியர்கள் திடீர்  போராட்டம்.!

பொதுவாக ரேஷன் கடைகளில் தற்போது அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. சில கடைகளில் இதனுடன் டீத்தூள், உப்பு ஆகியவையும் விற்கப்படுகிறது. ஆனால், சிந்தாமணி போன்ற கூட்டுறவு கடைகளில் சில மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. கடையின் இடவசதியை பொறுத்து பல்வேறு பொருட்கள் விற்கப்படுகின்றன. இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடவசதி உள்ள ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை விற்கவும் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுவது போன்று குறிப்பிட்ட ரேஷன் கடைகளை தேர்ந்தெடுத்து அங்கு மளிகை பொருட்களை பாக்கெட் போட்டு விற்க உள்ளனர். பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இது விரிவுப்படுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக 20 முதல் 25 ரேஷன் கடைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

” என்னை மரணத்திற்கு அருகில் அழைத்து சென்றனர்..” ஏலியன்களால் கடத்தப்பட்ட நபர் சொன்ன பகீர் தகவல்கள்...

Thu Jul 7 , 2022
வேற்றுகிரகவாசிகள் அல்லது ஏலியன்கள் மற்றும் யூ.எஃப்.ஓ ஆகியவை தொடர்பான விசித்திரமான விஷயங்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டே இருக்கின்றன.. பலர் வேற்றுகிரகவாசிகளையும், யூ.எஃப்.ஓக்களையும் நேரில் பார்த்ததாக கூறியுள்ளனர். ஆனால் இந்த கூற்றுகள் உண்மை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க எந்த அதாரமும் இல்லை என்பதால் ஏலியன்கள் பற்றிய மர்மங்கள் இன்றும் தொடர்கின்றன.. பூமியில் வேற்றுகிரகவாசிகள் ஏற்கனவே இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். ஏலியன்கள் பூமியில் இருந்து மனிதர்களை […]

You May Like