அகில இந்திய வங்கி வேலைநிறுத்தம் காரணமாக, ஜனவரி 30, 31 தேதிகளில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என்பதால், வங்கி தொடர்பான பணிகளுக்காக அருகிலுள்ள வங்கிகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள வங்கி வாடிக்கையாளர்கள், அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த வாரம் இரண்டு நாள் வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளது. ஜனவரி 30 முதல் ஜனவரி 31 வரை வேலைநிறுத்தம் காரணமாக கிளைகள் முழுவதும் அதன் வழக்கமான சேவைகள் பாதிக்கப்படும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்தத்தின் போது அதன் கிளைகள் மற்றும் அலுவலகங்கள் முழுவதும் சேவைகள் வழக்கம் போல இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.