fbpx

சீமானுக்கு கிடைத்த வெற்றி..!! நாம் தமிழர் கட்சிக்கு “விவசாயி சின்னம்” ஒதுக்கீடு..!! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

கடந்த 2019 மற்றும் 2021ஆம் ஆண்டு தேர்தல்களில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த மக்களவை தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால், சீமான் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. இதனால், நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8% வாக்குகளுக்கு மேல் பெற்றதால் 2025 ஜனவரி 10ஆம் தேதி அக்கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்த கடிதத்தில், “தேர்தல் சின்னங்கள் சட்டம் 1968, பிரிவு 6ஏ-ன் விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பூர்த்தி செய்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது” என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தான், நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அக்கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.

Read More : “இங்க நிலைமை சரியில்லப்பா”..!! ஐபிஎல் நிறுத்தப்பட்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் கொல்கத்தா அணி வீரர்..!! யார் தெரியுமா..?

English Summary

While the Naam Tamilar Party has been recognized as a state party, the Election Commission of India has ordered the party to allocate the farmer symbol.

Chella

Next Post

Breaking : இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமல்.. தரை, கடல், வான்வழி தாக்குதலை நிறுத்த ஒப்புதல்..

Sat May 10 , 2025
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், மாலை 5 மணி நிலவரப்படி இராணுவ நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி புதுமிகச் சுருக்கமான செய்தியாளர் சந்திப்பை நடத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டார். “பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய ராணுவ தலைமை இயக்குனரை அழைத்தார். இரு தரப்பினரும் நிலம், வான் மற்றும் கடலில் அனைத்து துப்பாக்கிச் […]

You May Like