பீகார் மாநிலம் அராரியாவில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த நிலையில் இருந்த பாம்பு. உணவை சாப்பிட 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.
பீகாரில் சனிக்கிழமையன்று அராரியாவில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு காணப்பட்டதால் மாணவர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அராரியா மாவட்டத்தின் ஃபோர்பேஸ்கஞ்சில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உணவை சாப்பிட்ட பிறகு நோய்வாய்ப்பட்டனர் மற்றும் சிகிச்சைக்காக ஃபோர்ப்ஸ்கஞ்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.