fbpx

சென்னை பறக்கும் ரயிலில் மாணவர்கள் ஆபத்தான பயணம் ….

சென்னை பறக்கும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பறக்கும் ரயிலில் மாணவர்கள் ஜன்னலில் தொங்கியவாறு பயணம் மேற்கொண்ட வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் 5 மாணவர்கள் ஜன்னலில் கால் வைத்து ரயிலின் மேற்பகுதியை பிடித்துக் கொண்டு ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபட்டனர். விபரீதத்தை உணராமல் மாணவர்கள் தலைகீழாக தொங்கி அட்டகாசம் செய்கின்றனர். இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்களில் எத்தனையோ விபத்துக்கள் நேர்ந்துள்ளன. செல்பி மோகத்தால் பல மாணவர்கள் ரயில் முன்பு சாகசம் செய்கின்றனர். எத்தனையோ விபத்துக்கள் ஓடும் ரயிலில் நடக்கின்றது. ஆபத்தை உணராமல் மாணவர்கள் இவ்வாறு செயல்படுவது அனைவருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

Next Post

புதையல் எடுக்க தோண்டிய குழியில் உட்கார்ந்தபடி மர்ம முறையில் சாவு... போலீசார் விசாரணை..!!

Thu Sep 29 , 2022
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே இருக்கும் பொம்மதாதனூர் ஊராட்சி புதூர் கிராமத்தில் வசிப்பவர் லட்சுமணன் (50). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு நாகராஜ் (24), சிவகுமார் (22) என்ற மகன்களும், தனலட்சுமி (20) என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் லட்சுமணன் நேற்று தனது வீட்டின் அருகே இருக்கும் வெற்றிலை தோட்டத்தில் புதையல் எடுக்க குழி தோண்டினார். மேலும் அதில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை […]

You May Like