fbpx

தமிழ்நாட்டில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை..!! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழ்நாட்டில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை காரணமாக தேங்கி நிற்கும் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில், மீண்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வெளியான அறிவிப்பு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதிலும் வட மற்றும் தென் மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட கனமழையால் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், ஏற்பட்ட வெள்ளத்தால் இன்னும் பல மாவட்டங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலை உள்ளது. இதற்கிடையே, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 30ஆம் தேதி (சனிக்கிழமை) வரை தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

செக்ஸ் டார்ச்சர்.! 25 வயது இளைஞர் கொடூர கொலை.! 3 சிறுவர்கள் கைது.!

Mon Dec 25 , 2023
தலைநகர் டெல்லியில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கு பழி வாங்குவதற்காக 25 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியின் நிஜாமாபாத் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 சிறுவர்களை கைது செய்து விசாரணை செய்தபோது ஆசாத் அஹமது என்ற 25 வயது இளைஞரை படுகொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடலை அருகிலிருந்த பூங்காவில் வைத்து […]

You May Like