fbpx

மாநில அரசுக்கு எதிரான மிரட்டல் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும்…! அமைச்சர் அன்பில் மகேஷ்

மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி பா.ஜ.க. வழக்கறிஞர் ஜி.எஸ். மணி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றம், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துங்கள் என்று மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தது. மேலும், ஒரு விவகாரம் அரசியல் சாசனத்துக்கு முரணாக உள்ளது என்றால் நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்றும், இந்த விவகாரம் அடிப்படை உரிமையை மீறுவதாக இல்லை என்று கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில்,தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், தேசிய கல்விக் கொள்கை 2020 போன்ற எந்தவொரு கொள்கையையும் ஏற்றுக் கொள்ள மாநிலங்களை நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இக்கருத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் வழிநின்று வரவேற்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. எனவே, மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். நமது கல்வி நிதியை உடனே வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read More: அத்துமீறி பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது…! வலுவான பதிலடி கொடுக்கப்படும்..! விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு…

English Summary

The central BJP government should stop its intimidation against the state government…! Minister Anbil Mahesh

Vignesh

Next Post

"தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா"!. இன்று அன்னையர் தினம்!.

Sun May 11 , 2025
"Aren't all the words a mother says the medicine that cures diseases?" Today is Mother's Day!

You May Like