fbpx

வாவ்..! “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டம்…! 3 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படும்…!

முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

முன்னாள் படைவீரர் நலனுக்காக “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும், இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் என கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இத்திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூபாய் ஒரு கோடி வரை வங்கிகள் வாயிலாக கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும். இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30% மூலதன மானியமும், 3% வட்டி மானியமும் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வரசாணையில் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப்பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும். 55 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் / இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும் / முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் விதவை மகள்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் /இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள் /முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் விதவை மகள்கள் ஆகியோர் சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

The Chief Minister’s “Protecting Hands” scheme…! A 3 percent interest subsidy will be provided.

Vignesh

Next Post

குட்நியூஸ்!. ரெப்போ விகிதம் 125 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படலாம்!. ரிசர்வ் வங்கி கொள்கையில் மாற்றமா?

Tue May 6 , 2025
Good news!. Repo rate may be cut by 125 basis points!. ​​Will there be a change in Reserve Bank policy?

You May Like