சுதந்திர போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.18,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..
நாட்டின் 76-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.. இதே போல் மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில் சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.. பின்னர் சுதந்திர தின உரையாற்றி அவர் “ எண்ணற்ற தியாகிகள் பெற்று தந்த விடுதலை இது.. 75 ஆண்டுகால விடுதலை காற்றை சுவாசிக்க உதவிய விடுதலை போராட்ட வீரர்களை வணங்குகிறேன்..
இந்த இந்திய துணைக்கண்டத்திலேயே சுதந்திரத்திற்காக முதலில் குரல் கொடுத்தது தமிழகம் தான்.. 1757 சிப்பாய் புரட்சியை தான் முதல் சுதந்திர போர் என்று சிலர் கூறுகின்றனர்.. ஆனால் அதற்கு முன்பே தமிழகத்தில் விடுதலை போராட்டம் தொடங்கிவிட்டது.. விடுதலை போராடத்தில் ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர்…
சுதந்திர போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.18000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.. சுதந்திர போராட்ட வீரர்களின் வழி தோன்றலுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9000-ல் ஒருந்து ரூ.10,000-ஆக உயர்த்தப்படுகிறது..” என்று தெரிவித்தார்..