fbpx

சென்னை தாம்பரத்தில் மூன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!

சென்னையின் முக்கிய நுழைவு வாயிலாக கருதப்படும் தாம்பரம் ரயில் நிலையாம் வழியாக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் செல்கின்றனர். தென் மாவட்டங்களுக்கு செல்கின்ற சில ரயில்கள் இங்கிருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு அந்த நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை, எனினும் பயணிகள் மத்தியில் சில நேரம் பதற்றம் ஏற்பட்டது. தாம்பரம்-சானடோரியம் இடையே வாகனங்களை ஏற்றிச் செல்லும் காலி சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த விபத்து, புறநகர் மின்சார ரயில்கள் செல்லும் பாதையில் அல்லாமல், வேறு பாதையில் நிகழ்ந்ததால், வழக்கமான ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து, ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More: ’ஏப்ரல் 21ஆம் தேதி வரை தான் டைம்’..!! மொத்த கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

English Summary

Three train coaches derail in Tambaram, Chennai..!

Kathir

Next Post

சொந்த மண்ணிலேயே SRH படையை சாய்த்த ஷர்துல் தாக்கூர்!. 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்!. முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ!.

Fri Mar 28 , 2025
Shardul Thakur beats SRH on home soil!. Amazing 4 wickets!. Lucknow registers first win!.

You May Like